Thursday, May 11, 2017

ஓலைக் குடிசையிலே!


ஒத்தை விளக்கெரியும் ஓலைக் குடிசையிலே
சித்தம் முழுவதுமே சிரித்த முகம்சிவக்க
சத்தம் இல்லாத சலங்கை ரகசியத்தில்
அத்தை மகள்வரவை ஆர்க்கப் பார்த்திருந்தான்!
மத்தம் பிடிக்கவைத்த மங்கை மனதினிலே!
புத்தகம் படிக்கையிலோ பூமுகம் எதிரினிலே!

ஓலைக் குடிசையிலே ஒத்தை விளக்கெரிய
வாலைக் குமரியவள் வளையல் கரங்களிலே
பாலைக் காய்ச்சிவந்து பக்குவமாய் இனிப்பிட்டு
ஏலக் காய்சேர்த்து ஏந்திவரும் அழகினிலே
சேலைத் தலைப்புக்குள் சேர்த்துக் கட்டிவிட்டாள்!
நாளை என்பதுவே நாயகனின் நினைவில்லை!

எப்போதோ எழுதியது!




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...