Monday, December 10, 2012

வயது சாதனை?!......7

நகரமும் இல்லாத, கிராமமும் அல்லாத
அவினாசி பகுதியில், ஒரு பழைய மொபட்
வாகனத்தின்  பின், சின்ன சின்னபொருட்களை
வைத்து விற்பனை செய்கிறார் பெரியவர் ஒருவர்.
அவரது சட்டையின் பின்பகுதியில், எனக்கு காது
கேட்காது என்று எழுதி ஒட்டியுள்ளார். காரணம்
அறிய, அவரை நிறுத்தி சைகையால் பேசியபோது
அவர், நம் கண்களையும், உதடுகளையும் பார்த்தே,
என்ன கேட்கிறோம் என்பதை புரிந்து,பதில் தருகிறார்.
            பெயர் கல்யாண சுந்தரம். வயது எழுபத்து நாலு.
திருப்பூர் பகுதியில் நன்றாக வாழ்ந்திருக்கிறார்,அவரது
மகன் ஒருவர், இன்றைக்கும் நாற்பதுபேரை வைத்து,
திருப்பூரில் தொழில் நடத்திவருகிறார் என்பது, பேச்சின்
மூலம் தெரிய வந்ததேதவிர,பழையவிஷயத்தின்
ஆதிக்கோ, ஆழத்திற்கோ போக அவர் பிரியப்படவில்லை.
யார் எங்கே இருந்தாலும், நல்லாஇருக்கட்டும்.என்கிறார்.
        மனைவியோடு அவினாசி வந்தவருக்கு கவுரவமாக,
நியாயமாக, எளிமையாக குடும்பம் நடத்த ஒரு தொழில்
தேவைப்பட்டது. ஊக்கு, ஹேர்பின்,லஞ்ச்பாக்ஸ்,விசிறி
உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மொத்தமாக வாங்கி,
மொபட்டில் வைத்து பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு
எடுத்துச் சென்று விற்பனை செய்கிறார்.இவரது
பொருட்களின் மதிப்பு இரண்டு ரூபாயிலிருந்து இருபது
ரூபாய் வரைதான்.ஒருநாளைக்கு பெட்ரோல் சிலவுபோக
நூறிலிருந்து நூற்றைம்பது ரூபாய்வரை கிடைக்கிறது.
      காது கேட்காததைப்பற்றிக் கவலை படவேஇல்லை இவர்.
இதன்காரணமாக தான்விற்கும் பொருட்களின்மீது விலையை
ஒட்டிவிடுகிறார்.ஒருரூபாய், இரண்டுரூபாய் லாபம் வைத்தே
இவர் விற்பது வாடிக்கையாளர்களுக்கு தெரியும் என்பதால்
யாரும் பேரம்பேசாமல் பொருளை வாங்கிச்செல்வர்.
            கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகள் சிலருக்கு
நல்ல நாள்போன்ற தினங்களில், இலவசமாக பொருட்கள்
தந்து மகிழ்ச்சிப்படுத்துவதும் உண்டு.
            பழகியவர்களுக்கு என்னைப்பற்றி தெரியும். புதிதாக என்னை
பார்ப்பவர்களுக்கு என்னைப்பற்றி தெரியாமல் சிரமப்படக்கூடாது
என்பதற்காகவும் சாலையில் போகும்போது பின்னால் வரும்
வாகன ஓட்டிகள் ,என்நிலையை தெரிந்துகொண்டால், வீணாக
ஆரன் சப்தம் கொடுத்து சிரமப்பட வேண்டாம் பாருங்கள்.....
அதற்காகத்தான் சட்டையில் பின்பக்கத்தில் ‘எனக்கு காதுகேட்காது"
என்று எழுதி,பின்போட்டுள்ளேன்.இதில் எனக்கு எந்தவெட்கமும்
இல்லை... என்கிறார்.
           ஓய்வு எடுக்கவேண்டிய வயதில், களைத்து போகாமல் உழைத்து
பிழைக்கும் கல்யாண சுந்தரத்தை நினைத்து, உழைக்காமல்,
இலவசங்களை நம்பி வாழ்பவர்கள்தான் வெட்கப்பட வேண்டும்.
உண்மையில் இவரை நினைத்து நாமும் நாடும் பெருமைப்படத்தான்
வேண்டும்.
       
          நன்றி தினமலர் 13-05-2012.

         நானும் எனது அறுபது வயதுக்கு பிறகுதான் எனது குழந்தைகளிடமிருந்து இந்த கணினியைகற்றுக்கொண்டேன்.ஷேர் வணிகம்
என்தந்தையிடம்கற்றுக்கொண்டேன்.முன்பு எழுதிவைத்திருந்த கவிதைகளையும் இதில் வெளியிட்டுள்ளேன்.
                                                                                        நல்லது.

1 comment:

Dino LA said...

பாராட்டுக்கள்..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...