Saturday, October 29, 2011

யாதுமாய்!

பட்டம் வாங்குதற்குப் பணிசெவதில்லையிவர் [துன்பப்]
பட்டவர்க்கு உதவுகின்ற பரந்தமனப் பண்பாளர்!
கிட்டும்வண்ணம் நன்மையெலாம் கேண்மையுடன் செய்திடுவார்
தொட்டதெல்லாம் பொன்னாகும் தூயமனச் செம்மலிவர்!

வங்கியிலே போட்டுவைத்து வளர்நிதியம் போதுமென்பார்!
பொங்கிவரும் செல்வத்தில் பொருளில்லார்க் கெனக்கொஞ்சம்
கங்கையெனப் பெருகிவர களிப்போடு தந்திடுவார்!
மங்கலங்கள் சேர்கஎன மனமார வாழ்த்திடுவார்!

கோவில்திருப் பணிசெய்யக் கொண்டுவந்து தந்தவர்கள்
வாழ்வில்கருப் பனின்கையால் வல்லருள்பெற் றுய்யவென
யார்க்கெனவும் வேண்டிநிற்பார் யாதுமாய் வருகஎன்று
நார்இழையும் நன்மலராய் நலம்பெருக வேண்டிநிற்பார்!

நற்குழந்தை கல்விக்கும் நலிந்தவர்க்கும் சிறிதுதவி
பெற்றவர்கள் மனம்மகிழப் பிரியமுடன் பேசிடுவார்!
தற்புகழ்ச்சி கொள்ளாத தனிப்பெருந் தகையாளர்!
சொற்புகழ்ச்சி வேண்டாத சொக்கத் தங்கமிவர்!

பெற்றவர்க்குப் பெருமகனாய்ப் பெருமையுறப் பேணியிட்டார்!
உற்றவர்க்கு உறுதுணையாய் உளமகிழப் பணிசெய்தார்!
நற்றவத்தால் பெற்றமகன் நலமுறவே வாழவேண்டி
பெற்றவர்கள் வாழ்த்திடவே பிறந்திட்டார் வாழியவே!


2 comments:

valliappan said...

TO WHOM THIS POEM IS RELATED,WILL YOU PLEASE MENTION MY AUNT-YOUR ANNAN MAGAN VALLIAPPAN

valliappan said...

To Whom This Poem is Related,will you pleas mention my aunt-Your annan magan valliappan.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...