Tuesday, July 5, 2011

வேப்பமர நெழலில.

வேப்பமர நெழலில வெள்ளக்கல்லுல குந்திக்கிட்டு
கேப்பக்கூளு மோருஊத்தி உப்புப்போட்டுக் கரைச்சுக்கிட்டு
ஏப்பம்வார வரைக்கும்அத ஊத்திஊத்திக் குடிச்சாக்க
சாப்பாடே வேணாங்க சந்தோசம் வருமுங்க!
உப்பொ[உ]ரப்பா ஊறுகாயும் ஒரசிவச்ச மீங்கொளம்பும்
பருப்ப[அ]றச்சுக் கொதிக்கவச்சும் பக்குவமாச்சாப்பிடலாம்!
அப்பிடியே கூடக்கொஞ்சம் அச்சுவெல்லம் நெய்யிபோட்டு
அப்புறமுஞ் சாப்பிடலாம் அலுக்காத உணவுங்க!

கேப்பக்கூளு சாப்பிடுங்க கேடில்லாத உணவுங்க!
வேப்பமரக்காத்துல விழுந்துபடுத்து தூங்கிறுங்க!
எந்திரிச்சு வந்தாக்க ஏராளமா வேலபாக்க
எந்திரம்போல சுறுசுறுப்பு எப்பவுமே இருக்குமுங்க!

கேப்பக்கூளு சாப்பிடுங்க கேட்டுவாங்கிச் சாப்பிடுங்க!

3 comments:

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

Niroo said...

vadai

Niroo said...

ஆமா

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...