Wednesday, February 2, 2011

வலையெடுத்துப் போனவரே

காலையில வலையெடுத்து
கட்டுமரங் கட்டிகிட்டு
காத்துவழி அலையெதுத்து
கடலுமேல போனவரே..
கடலலைய எதுத்துநீங்க
மீனத்தேடிப் போனியளே
மின்னலாப் போனியளோ?
மானங்கெட்ட மனுசனுவ
மறைஞ்சிருந்து சுட்டானோ?
காணங் காணமின்னு
கருக்கடையாக் கடலோரம்
காத்திருந்து பூத்துப்போன
கண்ணெல்லாங் கலங்கவச்சு
எண்ணமெல்லாஞ் செதறவச்சு
எங்கொலத்தப் பதறவச்ச
மண்ணாப்போற பாவியள
கண்ணால பாத்துக்கிட்டு
கடவுளுந்தேன் இருக்காரோ?
ஆருக்கு நாங்கஎன்ன
அடுக்காத தீங்குசெஞ்சம்?
மீனத்தான புடிச்சுவந்து
மெனக்கெட்டு வித்துவந்தம்
வலையெடுத்துப் போனவுக
வலையவீசு முன்னால
வதவதன்னு சுட்டுப்போட்டான்
அதகளமா ஆக்கிப்பிட்டான்
சின்னப் புள்ளையெல்லாந்
தெகச்சுப்போயி நிக்கிதையா
வாழ்க்கைக்கென்ன பாதுகாப்பு?
கேக்கதுக்கு ஆளில்லையா?
வாக்குக்கேக்க வந்தவுக
சீக்கிரமாச் சொல்லுங்கையா
ஆக்குசன எடுங்கைய்யா





 

1 comment:

Chitra said...

விரைவில் விடிவு வர வேண்டும். அவர்களின் கண்ணீர் நீங்க வேண்டும்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...